Comments

தமிழக செய்திகள்

காஜா முஹைதீன் படுகொலை : ஏர்வாடியில் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு மற்றும் சர்வ கட்சி கூட்டமைப்பு இணைந்து மாபெரும் போராட்டம்.....!!

ஏர்வாடியில் காஜா முஹைதீன் என்ற இளைஞர் இந்துத்துவ காவி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலைக்கார இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளை கைது செய்யக்கோரியும் ஏர்வாடியில் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு மற்றும் சர்வ கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்

மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ்,
SDPI தலைவர் KKSM தெஹ்லான் பாகவி,
PFI தலைவர் முஹம்மது இஸ்மாயில்,
இந்திய தேசியலீக் கட்சி தலைவர் தடா அப்துல் ரஹீம்

 உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களும், சர்வக்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், முதியவர்களும், இளைஞர்களும் திரண்டு அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.
அனைத்து சமுதாய மக்களிடமும் நேசத்துடன் பழகி வந்து காஜா முஹைதீன் படுகொலை தமிழகத்தையே உலுக்கியுள்ள சூழலில் காவல்துறை மெத்தன போக்கை கையாள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.

கைது செய் கைது செய்... கொலைக்கார சங்பரிவார கும்பலை கைது செய்...
மாய்த்திடுவோம் மாய்த்திடுவோம்... பாசிசத்தை மாய்த்திடுவோம்...
முறியடிப்போம் முறியடிப்போம்... சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் RSS சங்பரிவார சூழ்ச்சியை முறியடிப்போம்.... என்ற கோஷங்கள் விண்ணை பிளந்தது.

 
 
 
 
 




 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.