Comments

தமிழக செய்திகள்

சென்னையில் இந்துக் கோயில்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள்....







சென்னையில் ஒரு சில இந்துக் கோயில்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். இவர்களை கோயில் நிர்வாகம் தங்க சொல்லி அழைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.... அதே சமயம் இவர்கள் தங்கி இருப்பதை குறித்து கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ‪#‎இந்துக்_கோயில்‬ களில் தங்க அனுமதி கேட்டதற்கு மறுத்தாக களப்பணியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்த மக்களுக்கு உணவுகள் வழங்குவதற்காக இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களுக்குள் நுழைந்து உணவுகளை விநியோகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 
"இந்துக் கோயில்களுக்குள் ‪#‎இஸ்லாமியர்கள்‬ எப்படி நுழையலாம்?" என்று எந்த இந்துவாவது கேள்வி எழுப்பினால் அங்கிருக்கும் மக்களே உதைத்து அனுப்பும் சூழல் அங்கிருக்கிறது.

படத்தில் ‪#‎இஸ்லாமியர்‬ ஒருவர் இந்து மதத்தின் நம்பிக்கையை மதிக்கும் பொருட்டு காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறார். இதுப்போன்ற காட்சிகளை வட இந்தியாவில் காண முடியுமா என்பது சந்தேகமே.

பெரியார் மண்ணில் வட இந்திய மாநிலங்களைப் போல் ‪#‎மதத்தாண்டவம்‬ உக்கிரமாக இல்லை என்பதற்கு இப்புகைப்படம் ஓர் உதாரணம்.

எழுதியவர்
#‎தமிழச்சி‬

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.