Comments

இந்தியா

நாட்டில் 12ம் வகுப்பு முடித்த 75 ஆயிரம் பேர் பிச்சையெடுப்பதாக புள்ளிவிவரம் தகவல்...


நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் 75 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த வேலையில்லாதவர்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான புள்ளி விவரம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதில், நாட்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் 21 சதவீத மக்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் என கூறப்பட்டுள்ளது.

திறமைக்கேற்ற வேலை கிடைக்காததால் பிச்சையெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.