நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் 75 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்த வேலையில்லாதவர்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான புள்ளி விவரம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இதில், நாட்டில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பிச்சையெடுத்து கொண்டிருப்பதாகவும், அவர்களில் 21 சதவீத மக்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு திறன்பெற்ற இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் என கூறப்பட்டுள்ளது.
திறமைக்கேற்ற வேலை கிடைக்காததால் பிச்சையெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment