Comments

மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் நின்று கொண்டு இருந்த கல்லூரி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து...!

பெரம்பலூர் : சங்கு பேட்டை அருகில்  அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் தனியார் கல்லூரி பேருந்து பின்புறம்  மோதி  விபத்துக்குள்ளானது. அரசு  பேருந்தின் முன்பக்கம் கண்ணாடி நொறுங்கியது.

காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் அதிக அளவில் மாணவ மாணவிகள் பயணம் செய்தனர்.

மேலும் வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள் என்று ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் இன்று காலை 9 மணி அளவில்  சங்கு பேட்டை  அருகே  சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த பஸ்,பிரேக் பிடிக்காததால் நின்று கொண்டு இருந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி நின்றது . இதைப் பார்த்ததும் பஸ்சில் இருந்த மாணவ–மாணவிகளும், பயணிகளும் பயத்தில் அலறினார்கள். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.













 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.