பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (டிசம்பர் 6) இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது.. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிச. 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கபட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது. இடிக்க பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டித்தர வழியுறுத்தி இன்று காலை 11 மணிக்கு பெரம்பலூரில் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் பெரம்பலூர் மாவட்ட தமுமுக மாவட்டத் தலைவர் ஜனாப். மீரான் மொய்தீன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார் இதில் திரளான தமுமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.1.30 மணி வரை நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு,பெரம்பலூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரம் பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
படங்கள்: நூர் முஹமது
0 comments:
Post a Comment