மதவாத பாஜக, ஆட்சியமைக்கவுள்ளதால், நாடு பிளவு படும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக, கவலை தெரிவித்துள்ளார் டெல்லி ஷாஹி இமாம் செய்யத் அஹ்மத் புகாரி.
மதசார்பற்ற மக்களின் வாக்குகள் பலவாறாக பிரிந்து விட்டதால் தான், பாஜக'வினால், இந்த வெற்றியை பெற முடிந்துள்ளது என்றார் அவர்.
பாஜக, மதவாதத்தை கையிலெடுத்தால், நாங்களும் மதவாதத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டி வரும், என்றார்.
தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரங்களிலும் அவர்கள் மத-வன்முறையை தூண்டும் வகையில் செயபட்டதை வைத்து தான், தம்மால் இக்கருத்து முன் வைக்கப்படுகிறது என்றார், இமாம்.
மதவாத கொள்கைகளை முன்னிறுத்தி செயபடுவதா? அரசியல் அமைப்பு சட்டத்தின் படி செயல்படுவதா? என்பதை, ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின், அனைத்து சமுதாயங்களையும் அரவணைத்து சென்று, நாட்டு முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடவேண்டும் என்பதே தமது அவா, என்றார் டெல்லி இமாம்.
மோடி ஆட்சிக்கு வருவதால் தங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
கடந்த 2002 முதலே, இஸ்லாமியர்கள் மத்தியில் மோடி குறித்த அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
என்றாலும், மோடி, தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாவிட்டால், காலம் தான் அதற்கான பதிலை சொல்லும் என்றார், இமாம் புகாரி.
0 comments:
Post a Comment