திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோட்டை இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் சத்திரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று, அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு கடையில் ஆபாச படங்களை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், கடையில் இருந்த கம்ப்யூட்டர். புதுப்பட சி.டி.க்கள், மெமரிகார்டு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 27), முசிறி மேலவடுகப்பட்டியை சேர்ந்த வினோத்(26), கிராப்பட்டி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த அன்வர்(வயது 22) என்பதும், அந்த கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான கடை உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்த 3 பேர் கைது..
திருச்சி சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோட்டை இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் சத்திரம் பஸ்நிலையம் பகுதிக்கு சென்று, அங்குள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு கடையில் ஆபாச படங்களை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், கடையில் இருந்த கம்ப்யூட்டர். புதுப்பட சி.டி.க்கள், மெமரிகார்டு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 27), முசிறி மேலவடுகப்பட்டியை சேர்ந்த வினோத்(26), கிராப்பட்டி ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த அன்வர்(வயது 22) என்பதும், அந்த கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவான கடை உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment