பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 8ம்தேதி உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைகளைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பிழைதிருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் கலால் உதவி ஆணையர் சூரியமூர்த்தி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும்,
குன்னம் வட்டம் பெண்ணக்கோணம் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சின்னதம்பி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், நொச்சிக்குளம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலும், வருகிற 8ம்தேதி காலை 11மணி அளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thanks
Dinakaran
0 comments:
Post a Comment