Comments

குண்டு வைக்கச் சொன்னது ஆர்.எஸ்.எஸ்.தான்: - அசிமானந்தா வாக்குமூலம்!



இந்தியாவில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளுக்கு சதித்திட்டம் தீட்டி மூளையாகவும், மூலக்காரணமாகவும் இருந்து நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி ‪#‎அசிமானந்தா‬ என்ற சாமியார் தற்போது அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை குண்டு வைக்கச் சொல்லி ஏவியதும், வழிகாட்டியதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசியத்தலைவர் மோகன் பகவத் தான் என்று தற்போது அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்துக்களின் நன்மைக்காக நாட்டின் பல பகுதிகளில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டும் என்பது தத்துவ ரீதியாக சரியான செயலாம். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தேன். இதற்காக நான் பெருமைப்படுகின்றேன். கோட்சேவை தூக்கிலிட்டு புதைத்த இதே அம்பாலா சிறையில் என்னை அடைத்திருப்பது எனக்கு கூடுதல் பெருமை என்று அவன் கூறியுள்ளான்.

கலவரத்தீ மூட்டி இந்தியாவையே சுடுகாடாக ஆக்க பின்னணியாகவும், மூளையாகவும் செயல்பட்டது இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கம்தான் என்ற உண்மையை வழக்கம்போல ‪#‎காவி‬ வெறிபிடித்த மீடியாக்கள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்துவிட்டன. இந்த செய்தியை ஒவ்வொரு நடுநிலை இந்துக்களுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

தாங்கள் குளிர்காய வேண்டும் என்பதற்காக இந்த ஆர்.எஸ்.எஸ். ‪#‎தீவிரவாதிகள்‬ குண்டு வைத்து கொலை செய்த இந்துக்களின் பட்டியலை அவர்களுக்கு நாம் தெரிவிக்க வேண்டும்.
குஜராத்தில் கலவரத்தை உண்டு பண்ண 50க்கும் மேற்பட்ட இராம பக்தர்களை உயிரோடு கோத்ராவில் தீவைத்து கொளுத்தி கலவரத்தை தூண்டிவிட்டது இந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் என்ற உண்மையை இந்து சகோதரர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
கலவரத்தை மூட்ட வேண்டும் என்றால் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடுவார்கள். தங்களது அலுவலகத்திலும் வீட்டிலும் தாங்களே குண்டு வைப்பார்கள். கோயில் தேருக்கு இவர்களே தீவைத்து கொளுத்துவார்கள். அப்பாவி இந்துக்களை கொலை செய்து அதன் பழியை ‪#‎முஸ்லிம்கள்‬ மீது இவர்கள் போடுவார்கள் என்ற உண்மையை அவர்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.