மில்லத் நகரில் நேற்று மதரசா நூருல் இஸ்லாம் முப்பெரும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு மதரசா ஆண்டுவிழா உடன் நூருல் இஸ்லாம் இளைஞர் அணி 35 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட்டது.
இன் நிகழ்சியின் முதல் அமர்வில் தொடக்கமாகமாக முஹமது ராசித் (தேவ்பந்த்) ஹஜரத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கிவைத்தார்கள், மாணவர்கள் உரையாடல்கள், கேள்வி பதில் நடைபெற்றது ஆண்டு விழாவில் பேசிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் அமர்வில் அப்துல் ரகுஃப் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்கள் தொடர்ந்து உலமாக்களின் பயான், நிறைவாக மதரசா மாணவர்களின் பட்டி மன்றம் நடைபெற்றது.
திரளான பொதுமக்களும், ஜமாத்தார்களும், தாய்மார்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை மில்லத்நகர் இமாம் அஸரஃப் அலி ஹஜரத் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment