Comments

தமிழக செய்திகள்

சென்னை: முகநூலில் மக்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்ட கல்யாண் ராமனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் தனது முகநூல் பக்கத்தில், "சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.
 
நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.
 
முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 
கைது செய்யப்பட்டுள்ள கல்யாண் ராமன், தமிழக முன்னணி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பாஜக சார்பில் அடிக்கடி கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: Tamil opps

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.