Comments

ஊர்செய்தி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்! SDPI கட்சி ..



மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவீர்!

வி.களத்தூரில் டிசம்பர் 04 ம் தேதி அனைத்து வீடுகளிலும் மற்றும் பள்ளிவாசல்களிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி மற்றும் உணவு, உடை பொருட்கள் சேகரிக்கும் பணியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் ஈடுபடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் அனைவரும் தாராளமாக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.

அந்த வசனம் வருமாறு:

o (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்,

o ஏழைகளுக்கும்,

o தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,

o (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,

o அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,

o கடன்பட்டிருப்பதற்காகவும்,

o அல்லாஹ்வின் பாதையிலும்,

o வழிக்போக்கர்களுக்கும் உரியவை.

(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (அல்குர்ஆன் 9:60)


இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "தர்மம் செய்யுங்கள்..! ஏனெனில் உங்களிடையே (மக்களிடையே) ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப்பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப்பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்கு தேவையில்லையே..! என்றும் கூறுவான். உங்களிடம் செல்வம் பெருத்து  கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது." (புஹாரி-1411, 1412,& 1414 ஆகிய ஹதீஸ்களின் சுருக்கம்)


 இவன்,
SDPI கட்சி
வி.களத்தூர் நகரம்.
பெரம்பலூர் மாவட்டம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.