Comments

தமிழக செய்திகள்

சென்னையை தூய்மைப்படுத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் வழிகாட்டல் படி சென்னை மாநகரின் குப்பைகளை அள்ளி TNTJ நிர்வாகிகள், உறுப்பினர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

தூய்மை இந்தியா என்ற பெயரில் 7 இலைகளுக்கு ஒரு விளக்கமாற்றில் தூய்மை செய்வது போல் மீடியாக்களை வைத்துக்கொண்டு பாஜக படம் காட்டியதுப்போன்ற படம் அல்ல......

எந்தவித விளம்பரமும் இல்லாமல் உளவுத்தூய்மையுடன் சென்னை மாநகரை தூய்மை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

முதலாவதாக மீட்புப்பணி, இரண்டாவதாக நிவாரண பணி, மூன்றாவதாக தூய்மைப்பணியில் இறங்கியுள்ளனர்.

அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் தவ்ஹீத் ஜமாஅத் செய்து கொண்டிருக்கிறது.

இந்த சமுதாயம் குப்பைகளை ஏன் அள்ளுகிறது?

தன்னுடைய ஆடையில் துளி அழுக்கு இல்லாமல் கண்ணியமான முறையில் ஆடை உடுத்தும் ஓர் சமுதாயம் சாலைகளிலுள்ள குப்பைகளை சமுதாய நன்மைக்காக, நோய் தொற்றிவிடக்கூடாது என்று அள்ளி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானத்தில் மாநிலத்திலேயே தொடர்ந்து முதலிடம் இருந்துவரும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கு உழைக்க விரும்பினோம், கல்வியும் இட ஒதுக்கீடும் இல்லாததால் ராணுவத்தால் புறக்கணிக்கப்பட்டோம்.

TNTJ வில் இணைந்தோம், நாட்டிற்கும் உழைக்கிறோம், எங்கள் சமுதாயத்திற்கும் உழைக்கிறோம் என்று குப்பை அள்ளும் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

எல்லாபுகழும் இறைவனுக்கே...

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.