Comments

தமிழக செய்திகள்

அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் ரத்து 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு....


 
 
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை புரட்டிப் போட்டது. இந்த நான்கு மாவட்டத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது.

சென்னையை சுற்றியுள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளம் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டம், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது வரை சென்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18-ந்தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரணம் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.