Comments

வளைகுடா

அமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி !!!!!




அமீரக சாலை கோர விபத்தில் நாமக்கல் தம்பதி பலி. கடந்த சனி அன்று Al Ain (அல் அய்ன்) அருகே நடந்த சாலை விபத்தில் தமிழ்நாடு நாமக்கல் காமராஜர் நகரை சேர்ந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) மற்றும் அவரது மனைவி வினீஷா (இரண்டு மாத கர்ப்பிணி - வயது 21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவரது 10 மாத குழந்தை விபின் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தற்பொழுது அபுதாபி Al Tawm hospital இல் சிகிச்சை பெற்று வருகிறான்.

Eid விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொழுது இந்த கோர விபத்து நடந்துள்ளது. நண்பர்களுடன் பேருந்தின் கடைசி இருக்கையில் இவர்கள் தங்கள் 10 மாத குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அப்பொழுது எதிர் பாரத விதமாக வேறொரு Lexus காருடன் நடந்த விபத்தில் தம்பதி இருவர் , மேலும் இவர்களுடன் பயணம் செய்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பிரிவித்தி ராஜ்(வயது 31) அமீரகத்தில் IT பிரிவில் பணி புரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவரது மனைவியை அமீரகதிற்கு அழைத்து வந்துள்ளார். பெற்றோர் இருவரையும் இழந்த 10 மாத குழந்தை விபின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றதுடன் தற்பொழுது அபுதாபி Al Tawm hospital இல் சிகிச்சை பெற்று வருகிறான்.

இவர்களை இழந்து வாடும் இவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.