Comments

’மொபைல் ரெப்ரெஸ்மென்ட்’ என்ற திட்டத்தை துபாய் அரசு இலவசாமாக தொடங்கியுள்ளது.



Jun-13 துபாயின் பல்வேறு பகுதிகள் கடும் உழைப்பை செலுத்தி பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்களின் பசி, தாகத்தை தீர்க்கும் வகையில் ’மொபைல் ரெப்ரெஸ்மென்ட்’ என்ற தி...ட்டத்தை துபாய் அரசு இலவசாமாக தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, வரும் கோடைகாலம் தொடங்கிய இம்மாதத்திலிருந்து நவம்பர் மாத இறுதி வரை துபாயின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேருக்கு ஆரோக்கியமான‌ உயர்தரமான சிறந்த உணவு, இயற்கை சாறு வகைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட குடிநீர் போன்றவை தினந்தோறும் இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.

இதற்கான பணிகளை துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு பணிகளை மேற்கொள்ளும் துறை செய்துள்ளது. இதன்மூலம் சுமார் 7 லட்சம் தொழிலாளிகளுக்கு இதைப்போன்ற இலவச உணவு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இத்துறையின் தொண்டு காரியங்களுக்கான எக்சிகியுடிவ் இயக்குநர் அலி ஹஸன் அல் மர்ஸவுக்கி தெரிவித்துள்ளார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.