Comments

டிசம்பர் 2ல் துபாய் ஈமான் சங்கத்தின் அமீரக தேசிய தின கொண்டாட்டம்...

துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43வது தேசிய தினம் 02.12.2014 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஸாபில் பூங்காவில் ( ஜபீல் பார்க் - ஜப்பிளியா மெட்ரோ அருகில்) நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பூங்காவில் காலை 9.30 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன் அனுமதிச் சீட்டு பெறுவோர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். முன் அனுமதிச் சீட்டுகளை பெற கும்பகோணம் சாதிக் 050 22 52 711, காயல் ஈஸா 055 4063 711, கீழக்கரை ஹமீது யாசின் 050 475 3052, மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் 050 77 52 737, முதுவை ஹிதாயத் 050 51 96 433, படேஷா பஷீர் 050 54 54 140 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.




About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.