Comments

ஊர்செய்தி

புஷ்ரா நல அறக்கட்டளை லப்பைகுடிகாட்டிலும் தமது சேவையை துவங்கியுள்ளது. வாழ்த்துக்கள் புஷ்ரா ...

 
புஷ்ரா நல அறக்கட்டளை லப்பைகுடிகாட்டிலும் தமது சேவையை துவங்கியுள்ளது.
                                       
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(3:130)
நமது அறக்கட்டளை கடந்த 16 ஆண்டுகளாக வி.களத்தூரில் நகைக்கடன் திட்டத செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆணடுகாளக வியாபாரிகள் கடண் திட்டம் அமுல் படுத்தி வியாபாரிகள் வட்டியிலிருந்து மீள பெரும் உதவியாக இருந்து வருகிறது. கடன் தொகையை 10 மாதம் தவனையாக செலுத்தி பயன் பெற்றுவருகிறார்கள்.
வி.களத்தூர் மக்கள் மட்டுமே பயன் பெற்று வரும் இந்த சூந்நிலையில் நமது தொப்புள்கொடி உறவான லப்பைகுடிகாடு மக்களும் இந்த வட்டியிலிருந்து மீண்டு இலகுவாக வட்டியில்லா கடன் பெற வேண்டு என்ற நல்ல நோக்கத்துடன் நமக்கு நாமே உதவித்திட்டம், சிறு தொழில்உதவித்திட்டம், சிறு சேமிப்பு திட்டம், புஷ்ரா வைப்புத்தொகைத்திட்டத்தையும் கடந்த மே மாதம் முதல் ஆரம்பித்து உள்ளோம். என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்.
இது போன்று இன்ஸா அல்லாஹ் இந்தா ஆண்டு இருதிக்குள் பெரம்பலூர் மற்றும்  திருச்சியிலும் கிளைகளை ஆரம்பித்து நமது சகோதரர்கள் வட்டியில்லாமல் வியாபரத்தை பெருக்க நமது அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இன்ஸா அல்லாஹ் இறைவன் நாடினால், விறைவில் தமிழ் நாடு முழுவதிலும் இது போன்று கிளைகள் ஆரம்பித்து வட்டியில்லா கடன் திட்டத்தை விரிவு படுத்த நாடியுள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

அறக்கட்டளையின் சேவைகள்
1.   வட்டியில்லா நகை கடன் திட்டம்
2.  பொது சேவை திட்டம்
3.   நமக்கு நாமே உதவித்திட்டம் 
4.  கல்வி உதவித்திட்டம்
5.  சிறு சேமிப்புத்திட்டம்
6.  திருமண உதவித்திட்டம்.
7.  மருத்துவ உதவித்திட்டம்.
8.  சிறு தொழில் உதவித்திட்டம்.
9.   புஷ்ரா வைப்புத்தொகை திட்டம்
10.   புஷ்ரா முதலிட்டுத்திட்டம்


மேற்கண்டத்திட்டத்தில் அனைவர்களும் பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நமது அறக்கட்டளை முதலிட்டுத்தின் மூலம் ஜீன் மாதம் முதல் புதியதொரு வியாபாரத்தை ஆரம்பிக்க உள்ளோம் இதில் தாங்களும் இனைந்து முதலிடு செய்ய விரும்புவர்கள் பொதுச்செயளாலர் அப்துல் சலாம் 055-1153584 அவர்களை தொடர்புக்கெண்டு தங்களின் முதலிடுகளை அதிகரித்து கொள்ளுமாறு அன்புடன் அலைக்கின்றோம்.
நமது அறக்கட்டளை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் வட்டியில்லா கடனத்திட்டத்திற்கு போதிய நிதி இல்லை, எனவே உங்களால் முடிந்தளவு அறக்கட்டளையில் வைப்பு தொகையாக செலுத்தினால் இன்னும் பல நபர்கள் வட்டியிலிருந்து மீண்டு வருவார்கள் .தாங்கள் செலுத்தும் வைப்தொகையால் பல நபர்கள் பயன் அடைவார்கள். குறைந்தபட்சம் வைப்புத்தொகையானது ரூ5000.00 ஐந்து ஆயிரம் மட்டுமே. இத்திட்டத்தில் இனைந்து நன்மையை அல்லிகொள்ளுங்கள்.
”ஆதவுமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும் அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்ட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஉமாமர் (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:510)
இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரிஙங்களிலும் நன்மையை தந்து ஹாலல், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லாருள் புரியட்டும்.
நமது அறக்கட்டளைக்கு உங்களின் ஆலோசனைகளும் துஆக்களையும் எண்றென்றும் நோக்குகின்றோம்
                                 
உங்கள் தேவையே!!  எங்கள் சேவை!!
அன்புடன்
தலைவர்
M.அப்துல்லா பாஷா (துபை 050-3878421)
M.அன்சர் பாஷா (வி.களத்தூர் 9585358592)
Vkr.bct@gmail.combct.vkr@gmail.com, www.bushracaretrust.com

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.