தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிராம விளையாட்டு மற்றும் குழு போட்டிகள் கிராம ஊராட்சி அளவிலான விளையாட்டு போட்டிகள் (2013-2014) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தாருஸ்ஸலாம் வாலிபால் கிளப் முதல் பரிசு வென்றது. அலைன்ஸ் கிளப் மூன்றாம் பரிசு வென்றது.
அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி இன்று (26/1/2014) காலை 11 மணியளவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்கள் வெற்றிபெற்ற வர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதல் வழங்கினார். துணை தலைவர் ஜமால்தீன், கவுன்சிலர் சங்கீதா ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் முஹமது யூனுஸ், அரசு பள்ளி ஆசிரியர் ரகுமான் சரிப், சபியுல்லாஹ் முன்னிலை வகித்தனர்.
புகைப்படம்: ஸ்டார் ஹசன்
0 comments:
Post a Comment