பெரம்பலூர் :(24/01/2014) இன்று வி. களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் இளம் வயது திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ. சங்கர் தலைமை வகித்தார். பஞ்., தலைவர் நூருல்ஹுதா இஸ்மாயில் முன்னிலை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் வி.சுந்தரம் வரவேற்றார்.. ஆசிரியர்கள் சுல்தான் மொய்தீன், சௌந்தராஜன், ரகுமான் சரீப், மணி உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பஞ்சாயத் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புகைப்படம்: ஸ்டார் அசேன் முகமது
0 comments:
Post a Comment