இந்த சோதனையை வி.களத்தூர் போலிசார் மற்றும் ஊர்காவல் படையினர் நடத்தினர்.இந்த சோதனையின் போது களத்தூர் வழியாக வண்ணாரம்பூண்டி நோக்கி நீலமேகன் என்பவர் டாடா ACE யில்வேலை ஆட்களை ஏற்றி வந்ததாக தெரிகிறது..இவரின் வாகனதில் ஆட்களை ஏற்றி வந்தால் ஊர்காவல் படையினர் வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து ஊர்காவல் படையினருக்கும் நீலமேகன் இடையே தகராறு ஏற்ப்பட்டதாக தெரிகிறது.இதனால் அருகில் வேறொரு வாகனத்தை சோதனையில் ஈடுப்பட்டிருந்த வி.களத்தூர் துணை ஆய்வாளர் மாரிமுத்து அவர்களிடம் ஊர்காவல் படை போலிசார் நீலமேகத்தை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இதில் நீலமேகனுக்கும் SI மாரிமுத்து அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.வாக்குவாதம் முற்றியதால் வி.களத்தூர் துணை ஆய்வாளரின் கன்னத்தில் ப்ளார் என்று நீலமேகன் அடித்ததாக தெரிகிறது. (மாரிமுத்து நீலமேகன் இடையே நடந்த வாக்குவாதத்தில் முரண்பாடான தகவல் வருகிறது). இதனால் ஊர்காவல் படையினர் நீலமேகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வெளுத்து வாங்கினர்.
நீலமேகன் அடித்த செய்தி அருகில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பரவியது.இதனையடுத்து வண்ணாரம்பூண்டி ,அகரம்,திருவாளந்துறை பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர் .
பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் வி.களத்தூர் VAO ,மங்களமேடு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர் .
9.30 மணி வரை பேச்சுவார்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்ப்பட்டதாக தெரியவில்லை.
நன்றி:வி.களத்தூர்.காம்
0 comments:
Post a Comment