ஷார்ஜாவில் இருந்து கோவை சென்ற விமானத்தில் பறவை மோதி விபத்து - 100 பயணிகள் தப்பினர். ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று (12/10/2015) காலை 4 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து கோவை சென்ற air arabia விமானம் கோவை விமான நிலையத்தில் 100 பயணிகளுட...ன் தரை இறங்கியது.
ஓடுதளத்தில் air arabia விமானம் சென்ற போது எதிர்பாராதவிதமாக ராட்சத பறவை விமானத்தின் முன் பகுதியில் மோதியது. இதில் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது.
விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கம்போல் 4.30 மணிக்கு மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பிச் செல்லவேண்டும்.
சார்ஜாவுக்கு செல்ல கோவையில் இருந்து 166 பயணிகள் தயாராக இருந்தனர். பறவை மோதி விமானம் மோசமாக பாதிக்கப்பட்டதால் விமானத்தை இயக்க முடியாது என்று தெரியவந்தது.
இதனையடுத்து சார்ஜா செல்ல தயாராக இருந்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கம்போல் 4.30 மணிக்கு மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பிச் செல்லவேண்டும்.
சார்ஜாவுக்கு செல்ல கோவையில் இருந்து 166 பயணிகள் தயாராக இருந்தனர். பறவை மோதி விமானம் மோசமாக பாதிக்கப்பட்டதால் விமானத்தை இயக்க முடியாது என்று தெரியவந்தது.
இதனையடுத்து சார்ஜா செல்ல தயாராக இருந்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment