Comments

தமிழக செய்திகள்

சென்னையில் காலை முதல் தொடர்ந்து கனமழை!

சென்னையில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில், லட்சத்தீவுகளை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை 11.30 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.