Comments

சிறையில் அப்பாவி சிறுபான்மையினர் : முதல்வர்களுக்கு ஷிண்டே வலியுறுத்தல்



(30 Sep) அப்பாவி சிறுபான்மையினர் யாரும் சிறைகளில் அடைக்கப்படவில்லை என்பதை மாநில முதல்வர்கள் உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார்.தவறுதலாக குற்றம் செய்யாத அப்பாவி சிறுபான்மையினர் யாராவது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அதுபோன்று யாரும் சிறையில் இல்லை என்பதை உறுதி செய்யுமாறும் அனைத்து மாநில முதல்வர்களையும் வலியுறுத்தி உள்ளார் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.முஸ்லிம் இளைஞர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வழக்குகள் தவறுதலாகப் பதியப்பட்டதாகவே இருக்கும். எனவே, இஸ்லாமிய இளைஞர்கள் மீது குற்றம் இல்லாமல் கைது செய்யப்படுவதைத் தடுக்க முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஷிண்டே அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி: தினமணி

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.