Comments

ஈத் முபாரக் – பெருநாள் வாழ்த்துக்கள்





இந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முடிந்து விட்டது வியப்பாக இருக்கிறது.

உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த ரமலானில் நம்மால் இயன்ற அளவு, நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவ‌ வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்.

இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.


மேலும் மில்லத்நகரில் நடக்கும் ஈத் தொழுகை மற்றும்
கொண்டாட்டங்கள்  புகைப்படத்தை இன்ஷா அல்லாஹ் நமது
இணையத்தளத்தில் பதிவிடப்படும்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.