பள்ளிகளில் மதிய உணவை ஆசிரியரும், சமையல் செய்தவரும் சாப்பிட்டு அரைமணி நேரத்துக்குப் பின்னரே மாணவர்களுக்குத் தரவேண்டும் என்று கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெய்வேலி என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு உண்ட 150க்கும் அதிகமான மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் வீடு திரும்பினர்.
0 comments:
Post a Comment