நாளை 07-05-2013 காலை 10 மணி முதல் வி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் வளாகத்தில் "அம்மா திட்டம்" பொது மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டுகோள்!!
பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட்பட்ட வட்டங்களில் சுழற்சி முறையில் தமிழக முதல்வரால் கடந்த 24.2.2013 அன்று துவக்கப்பட்ட "அம்மா திட்டம" (அனைத்து கிராமத்திலும் அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) செயல்படுத்தத் திட்டமிட பட்டுள்ளது.
அதன் காரணாமாக நாளை காலை 10 மணி முதல் வி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் வளாகத்தில் நடைபெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
இம்முகாம் தொடர்பாக பெரம்பலூர் வட்டாட்சியர் வெளியிட்டுள்ள பிரசுரம் இதோ:-
இம்முகாமில் கீழ் கண்ட விபரங்கள் குறித்த மனுக்கள் மட்டும் பெறப்படும்:-
1. பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்).
2. குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள்.
3. பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள்.
4. சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள்.
5. வாரிசுரிமைச் சான்றிதழ்கள்
6. தல் பட்டதாரி / குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள்.
7.ஆண்வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள்.
8. குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள்.
9. முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள்.
10. துயர் துடைப்பு மனுக்கள் போன்றவைகள் ஆகும்.
0 comments:
Post a Comment