நான் பாதுகாக்கப்பட்டவள்...........!!!!
ஒடுக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாம்
ஹிஜாப் அணிந்திருக்கும் நான்...!!
ஏளன பார்வையுடன் என்னை கடந்து செல்கிறாள்..
தொடை தெரிய உடை அணிந்த
நவநாகரீக நங்கை ஒருத்தி...
என் மார்க்கம் எனக்களித்த
சுதந்திரத்தின் எல்லை பற்றி
அவளுக்கெங்கே தெரிந்திருக்க போகிறது.... பாவம்....!
கண்ணியம் காக்க நான் அணியும் உடை...
உன் கண்ணை உறுத்துகிறதே பெண்ணே...
உன் நாகரிக உடையால்
பல ஆண்களின் கண்களுக்கு இரையாகி....
அவர்களின் கனவில் தற்காலிக
மனைவியாகி போகின்றாயே...!!
இதுதான் உன் சமுதாயம்
உனக்களித்த சுதந்திரமா?
இல்லை அந்நிய ஆண்களை கவர வேண்டும் என்ற
நோக்கில் உடல் அழகை கடை விரித்து
காட்டும் கூட்டத்தை சேர்ந்தவளா நீ ?
அப்படி என்றால் எந்த அருகதையும் இல்லை"
உனக்கு என் ஹிஜாப் பற்றி பேச.....!!!!
ஆண்களின் கண்களுக்கு நீ ஒரு காட்சி பொருள்.....
ஆனால் நானோ பாதுகாக்கப்பட்ட பொக்கிஷம்....!!
வக்கிர புத்தி கொண்ட ஆண்களின் கழுகு பார்வையில்
இருந்து என்னை தற்காத்து கொள்ள.....
என் மார்க்கம் எனக்களித்த கேடயம் ஹிஜாப் ...!!
என் அறிவும் திறமையும் போதும் உலகை வெல்ல.....!!!!
தெரிந்து கொள் முட்டாள் பெண்ணே....
நான் ஒடுக்கப்பட்டவள் அல்ல...
பாதுகாக்கப்பட்டவள்...........!!!!!!
0 comments:
Post a Comment