உயிரிழப்புகளை தவிர திரும்பவும் நம்மால் சம்பாதிக்க கூடிய பல பொருட்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது!
அதே நேரத்தில் இதுவரை சம்பாதிக்காத, சம்பாதிக்க நினைக்காத பல அரிய விஷயங்களையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது!
நம் மாடி வீட்டில் எத்தனை பேர் என்று காட்டி கொடுத்திருக்கிறது!
பக்கத்து வீட்டு சாம்பார் சாதம் எவ்வளவு சுவை என்று சொல்லி கொடுத்திருக்கிறது!
எதிர்வீட்டு போர்வைகள் எவ்வளவு கதகதப்பு என்று உணர்த்த...ி இருக்கிறது!
House Owner களை எல்லாம் வாடகைக்காரர்களின் வீட்டில் இடம்கேட்டு தங்கவைத்து இருக்கிறது!
நம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இவ்வளவு அன்பானவர்களா என்று புரியவைத்திருக்கிறது!
அரசாங்கத்தை தவிர அத்தனை மனிதர்களும் இவ்வளவு நல்லவர்களா யோசிக்க வைத்திருக்கிறது!
ஏசி இல்லாமல் தூங்காத நம் செல்லங்களை எச்சில் கறை படிந்த தலையணைகளில் முகம் புதைத்து தூங்க வைத்திருக்கிறது!
நாம் சேர்த்து வைத்த லட்சங்கள் பேங்கில் தூங்குகிறது!
ஆடம்பரமாய் கட்டியவீடு தண்ணீரில் தூங்குகிறது!
ஆசையாய் வாங்கிய கார் வெள்ளத்தில் சிக்கி மரத்தில் மோதி தூங்குகிறது!
ஆனால் சகமனிதர்கள் மட்டும் அவர்கள் வீட்டில் நமக்கு இடம் கொடுத்து நாம் நன்றாக தூங்கவேண்டும் என்று அவர்கள் அப்படியும் இப்படியும் சாய்ந்தபடியே
நமக்காக தூங்காமல் இருக்கிறார்கள்!
இத்தனைக்காலம் நாம் உணரத்தவறிய மனிதாபிமானத்தையும் மனிதநேயத்தையும் உணர்த்துவதற்காகவே ஓடோடி வந்த இந்த வெள்ளம் உயிரற்ற பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உயிருள்ள மனிதர்களையும் மனிதத்தையும் விட்டுவிட்டு சென்றிருக்கிறது!
அவற்றை விட்டுவிடாமல் கைகோர்ப்போம்!
0 comments:
Post a Comment