வி.களத்தூரில் நேற்று (21.01.2014) மாலை 6.30 மணியளவில் TNTJ வி.களத்தூரி கிளையின் சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றிய விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த விளக்க பொதுக்கூட்டத்தின் துவக் உரையை முஹம்மது இப்ராஹிம் நிகழ்த்தினார்.
மாவட்ட பேச்சாளர் நஷீர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தன் சிறப்புரையில் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவை ஆண்டு வந்த முஸ்லிம்கள் பற்றியும் சுதந்திரத்திற்காக போராட்டத்தில் பங்கு கொண்ட முஸ்லிம்கள் பற்றியும் விளக்கினார். மேலும் இன்று அதாவது சுதந்திரத்திற்கு பிறகு முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறினார். மேலும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்ததால் நம் சமுதாயம் என்ன என்ன நன்மைகள் அடைந்துள்ளது என்பதை பற்றி விளக்கமாக கூறினார். இது 7 சதவிகிதமாக நமக்கு கிடைத்தால் நமக்கு கிடைக்க போகும் நன்மைகள் பற்றியும் தெளிவாக விளக்கினார். சிறை செல்லும் போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இன்று மாலை மில்லத் நகரில் இதே விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற இருப்பதாக வி.களத்தூர் TNTJ வின் தலைவர் அஹமத் கூறினார்.
0 comments:
Post a Comment